பக்கம்:நீங்களும் நோயில்லாமல் வாழலாம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


எத்தனை பேர் வாழ்வை இந்த வலது கையால் மொட்டைக் கடுதாசி எழுதிக் கெடுத்தோம்’ என்று எண்ணியவாறே மொட்டையாக நிற்கும் தன் வலது கையைப் பார்த்தாள். அவள் விட்டப் பெருமூச்சு ஆந்திராவை அடிக்கடி பாழாக்கும் பெரும் புயலைவிட வேகமாக இருந்தது.

பிறரைப் பற்றிப் பேசுவதைவிட, தன்னைப் பற்றி தலைக் கனத்துடன் பேசித் திரிபவர்கள் எதையும் சாதிக்க முடியாது என்பதுடன், எவற்றிலும் இன்பம் காணமுடியாது. பிறரை மகிழ்வித்து இன்பம் காண்பதே உண்மையான இன்பம். அதுவே மெய்நோயைப் போக்கும் வலிமையான மருந்தும் ஆகும்.