பக்கம்:நீங்களும் நோயில்லாமல் வாழலாம்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

84

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


வாழ்வு என்பார்களே நமது முன்னோர்கள், அது போலத்தான் மனம்போல உணவும்.

‘பசித்தவனுக்குப் பாகற்காய் இனிக்கும், பசி இல்லாதவனுக்குப் பிரியாணியும் கசக்கும்’ என்பது போல, மனம் விரும்பி மனம் எதிர்பார்த்து உட்கொள்கின்ற எந்த உணவையும் வயிறு வரவேற்று ஏற்றுக் கொள்கிறது. உடலும் நலமுடன் அதனை மாற்றிப் பயன் கொள்கிறது.

எனவேதான், எதையும் மனம் விரும்பி, ரசித்துப் புசிக்க வேண்டும் என்கிறோம். ஏனெனில், அவ்வப்போது மனதில் ஏற்படுகின்ற மனோபாவங்களுக்கும் உணர்ச்சிகளுக்கும் ஏற்ப உடலில் உற்பத்தியாகும் ஹார்மோன்கள், சுரப்பி நீர்கள் அளவில் குறைகின்றன, சில சமயங்களில் மிகுதியாகின்றன. அவை ஜீரணத்தைப் பாதிக்கும்.

ஆகவே, உணவு உண்ணும் நேரத்தில். நீங்கள் நிச்சயமாக, கட்டாயமாகக் கடைப்பிடிக்க வேண்டிய முறைகள் நியதிகள் சில உண்டு. அவற்றைக் கீழே கொடுத்திருக்கிறேன். முடிந்தவரை பயன்படுத்திக் கொண்டால் நல்ல பயன் கிடைக்கும்.

1. உணவு உட்கொள்ளும் நேரத்தை, சந்தோஷமான சூழ்நிலையுள்ளதாக அமைத்துக் கொள்ள வேண்டும், பலரோடு சேர்ந்து உண்ணும் பொழுதானாலும். தனியே உட்கொள்ளும் போதானாலும். மகிழ்ச்சிகரமான மனோ நிலையுடன் சாப்பிடப் பழகிக் கொள்ள வேண்டும். அதுவே அற்புதமான சக்தியை, அளவிலா ஆற்றலை நல்கி விடும்.