இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
5 நோயோடு நூறு ஆண்டுகள் வாழ்வதை விட, வலிமையோடு பயன்பட்ட வாழ்வை அதில் பாதி ஆண்டுகள் வாழ்ந்தாலும் போதுமே !
வலிமையோடு என்றால், பயில்வான்களாகத் திரிய வேண்டும் என்பது பொருளல்ல
நோய் அணுகாத உடல் வாய்க்கு ருசியாக எதையும் உண்ண, அதை ஏற்றுக் கொள்ளும் உடல் . நிமிர்ந்த நடை. நிமிர்ந்த தோற்றம். சுகமான சூழ்நிலை.
இப்படி ஒவ்வொருவரும் வாழ உதவுவது உழைப்பு. அதில்லாதவர்களுக்கு உடற்பயிற்சி விளையாட்டு,
பயன்படுத்திக்கொள்ள விரும்புவோர்களுக்கு பாதை காட்டும் பணியினை மேற்கொள்ளுகிறது. இந்நூல் .
அழகுற அச்சிட்டுத்தந்த கிரேஸ் பிரிண்டர்ஸ், பொறுப் பேற்று நடத்துகிற R. ஆதாம் சாக்ரடீஸ்க்கும் என் அன்பையும் நன்றியையும் தெரிவிக்கிறேன்.
என் நூல்களை ஆதரித்து வரும் தமிழ் பண்பாளர்களுக்கு என் நன்றியும் வணக்கமும் .
அன்பன்
ஞான மலர் இல்லம்
எஸ். நவராஜ் செல்லையா
சென்னை - 17 -
2Oー! I-84。