பக்கம்:நீங்காத நினைவுகள்-1.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

P. முத்துவேங்கடாசல துரை 99

தந்திருக்கலாம் அலுவலகத்தில் பழைய கோப்புகளிலிருந்து இதனைத் தேடி எடுத்துத்தந்திருக்கலாம் இதைத் தேடி எடுப்பது மொகஞ்சதரோ - ஹரப்பா நாகரிகத்தைக் காண மறைத்திரு ஹெராஸ் பாதிரியார் செய்த முயற்சி போலாகிவிடும் நானும் மேலும் மேலும் அவரை நச்சரிக்க நேரிடும் என்று கருதித் தம்மை அப்பொறுப்பினின்றும் நழுவச் செய்து கொண்டார். என்னையே அப்பள்ளியை அணுகுமாறு ஆற்றுப்படுத்திவிட்டார்.

இஆர் உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியரை நாடினேன் இதில் அவருக்கு உதவ விருப்பம் இல்லை என்பதை அவர் பேசிய முறையினின்றும் முகத்தை ஒருவிதமாகத் திருப்பிக் கொண்டும் பேசின பாவனையிலிருந்தும் அறிந்து கொள்ள முடிந்தது. சீரங்கம் உயர்நிலைப் பள்ளித் தாளாளர் "மலை முழுங்கி மகாதேவன்" என்பதை அறிந்திருந்ததால் அவரை அசைத்து என்னால் அறிந்து கொள்ள முடியாது என்று அங்குச் செல்வதைக் கைவிட்டேன். பொன்னையா உயர்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர் மூலம் நகல் கிடைத்தும் அப்பள்ளி கம்பெனி சட்டத்தின் கீழ் பதிவாகி இருந்தமையால் 20 பேர் தேவை அதுவும் கைவிடப் பெற்றது. கோவையிலிருந்து திரும்பும்போது ஈரோடு மகாஜன உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் M.R. பெருமாள் முதலியாரைச் சந்தித்துக் கேட்டேன். அங்குத் தாளாளர் அலுவலகம் என்று ஒன்று இருந்தது அது ஒரு பார்ப்பனச் சிறுவன் எழுத்தர் பொறுப்பிலிருந்தது. அவன் தாளாளரைக் கேட்காமல் நகல்தர முடியாது என மறுத்துவிட்டான் திரு முதலியாரும் தம் கையாலாகாத் தன்மையை நினைந்து வருந்தினார். அவர் பணியாற்றும் கேவலமான சூழ்நிலை எனக்குப் புரிந்தது. என் நிலை 100 மடங்கு உயர்ந்தது என்பதை நினைந்து மகிழ்ந்தேன். துறையூர் திரும்பியதும் தந்தை பெரியாருக்குக் கடிதம் எழுதினேன். மூன்றே நாளில் பத்திரத்தின் நகல் பதிவு அஞ்சலில் என்னை வந்தடைந்தது. இது அறக் கட்டளைச் சட்டத்தின்கீழ் பதிவு செய்யப் பெற்றிருந்ததால் 7 பேர் இது பயன்பட்டது. குடும்பத்தில் ஆறுபேரையும் தலைமை ஆசிரியர் (பதவிப் பொறுப்பு உறுப்பினராகவும் கொண்டு ஒரு வாரத்தில் பதிவு செய்யப் பெற்றது