பக்கம்:நீங்காத நினைவுகள்-2.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பன்னித் தாளாளர் இருவர் அமைச்சர் இருவர் வழக்குரைஞர்கள் இருவர் ஆசிரியர் ஒருவர் தமிழாசிரியர் ஒருவர் மாணாக்கர் ஒருவர் உச்சநீதிமன்ற நீதிஅரசர் ஒருவர் துணைவேந்தர் நால்வர். 隨 இந்த நூலுக்கு அணிந்துரை நல்கிய முன்னாள் அமைச்சர் திரு இராம. வீரப்பன் அவர்களின் அணிந்துரை பெற்றது இந்நூலின் பேறு என் பேறும் கூட. இவர் பெருமையைப் பேசுவது கொல்லத் தெருவில் ஊசிவிற்ற கதையாகும். சுதந்திரம் பெற்ற பிறகு நாட்டையாண்ட நல்லமைச்சர்கள் சிலருள் இவர் முன்னணியில் நிற்பவர். பொது அறிவு மிக்கவர். இவருக்கு என் நன்றி. இத்தநூல் அச்சாகுங்கால் பார்வைப் படிகளை மூலப்படியுடன் ஒப்புநோக்கியும் பார்வைப்படிகளில் எழுந்த பிழைகளைக் களைந்தும் உதவிய என் அபிமான புத்திரி டாக்டர் மு. சியாமளாவுக்கு என் அன்பு கலந்த நன்றி. இந்நூலை புகழ்பெற்ற அறிவியலறிஞரும் சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தருமாகிய, பேராசிரியர் பெ.த. மனோகரன் அவர்கட்கு அன்புப் படையல் செய்து அவர்டால் கான்கொண்ட அன்பையும் மரியாதையும் புலப்படுத்திக் கொள்கின்றேன். இவர்தம் நேர்மையான பணியால் முன்னாள் துணைவேந்தர் தாமரைச் செல்வர் நெது. சுந்தரவடிவேலுவை ஒப்ப புகழ் எய்துவர் என்பது என் கணிப்பு. அப்பெருமைப் பேறுபெற இறையருள் துணைநிற்க அவன் திருவடிகளை இறைஞ்சுகின்றேன். இவ்வரிய நூல் வெளிவருவதற்கு தமிழ் வளர்ச்சி இயக்ககத்தின் மூலம் ரூ. 8000/= நிதிஉதவி புரிந்த தமிழக அரசுக்கும் இதனை சிறந்த முறையில் வெளிவர ஒல்லும் வகையெலாம் உதவிபுரிந்த பால்நிலா பதிப்பகத்தாருக்கும் என் உளம்கனிந்த நன்றி. - என்னையும் ஒரு கருவியாகக் கொண்டு இருபது பெரியார்களுடன் யான்கொண்ட தொடர்புகளை நினைவிற்குக்