பக்கம்:நீங்காத நினைவுகள்-2.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

K.S.A.A. இராமநாதன் செட்டியார் #89 உள்ளிருந்து பின்னணியாக இயங்கும் மனிதன் இவை தாமாக எழுவனபோல் காட்டுகின்றான். இவற்றை வைத்துக்கொண்டு இந்திர ஜாலங்கள் எல்லாம் புரிந்து வருகின்றான். கம்பன் அடிப்பொடி சாக என்னைப் பார்த்து ஒருநாள். "ரெட்டியார். கவலைப்படாதீர்கள். ஆண்டவன் இருக்கின்றான். தாளாளருக்கும் எனக்கும் கருத்து வேறுபாடு இருப்பதால் நான் உள்நுழைந்து செயற்பட விரும்பவில்லை. அப்படிச் செய்தால் எதிர்விளைவுகள் ஏற்பட்டாலும் ஏற்படலாம். ஒன்று செய்யுங்கள். K.M.A.M. இராமநாதன் செட்டியார் முன்னாள் தாளாளர் இன்னும் இருபது நாட்களில் குடும்பத்துடன் மலேசியா போகின்றார்கள். கப்பலில் போகிறதாகச் சொன்னார்கள். முதலில் அவரைப் பார்த்து நடந்தவற்றை விவரமாக எடுத்துரையுங்கள். நானும் அவருக்குத் தங்கள் வருகையைப்பற்றியும் தொ.பே. மூலம் தெரிவித்து விடுகின்றேன். இதனால் நல்விளைவு நேரிடும் என்பது என் நம்பிக்கை" என்று கூறினார். - ஒரு வாரம் கழித்துக் கோட்டையூர் சென்று "பூதியாக" அவதூறு செய்தியைக் கிளப்பி என் பதவி உயர்வுக்குத் தடைக்கல் எழுப்பப் பெற்றிருப்பதை விவரமாக எடுத்துரைத்தேன். அப்போது அவர் நல்ல நாள் பார்த்து பயணத்தை மேற்கொண்டு பொது விடுதியில் தங்கியிருந்தார். நான் அவரைப் பார்த்தது பொது விடுதியில்தான். 'மணியன் அழகப்பர் அறத்தின் மேலாளர்) வேலைதான் இது" என்று கண்டுகொண்டார். மணியன் நடவடிக்கை பிடிக்காமல் தாம் தாளாளர் பதவியை விட்டொழித்ததாகவும் கூறினார். "கவலைப்படாதீர்கள், ரெட்டியார், ஆண்டவன் இருக்கின்றான். அவன் வழி காட்டுவான்" என்று சொல்லி விடைகொடுத்தார். • , இந்தக் காலகட்டத்தில்தான் K.V.A.M. இராமநாதன் செட்டியார் முக்கியமான பலரைப் பார்த்துத் தாம் மலேசியா போவதாகப் பயணம் சொல்லிக் கொண்டிருந்தார். C.W.CTV வேங்கடாசலம் செட்டியாரைப் பார்த்து பயணம் சொல்லிக் கொண்ட