பக்கம்:நீங்காத நினைவுகள்-2.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் ந. சஞ்சீவி - 259 நடைபெற்றது. திரு. தி.மு. நாராயணசாமிபிள்ளை கூட்டத்திற்கு வரவில்லை. அவர் காஸ்மாபாலிடன் கிளப்பில்தான் தங்குவார். அங்கிருந்து கொண்டு வந்த இடத்தில் திடீர் என்று உடல் நலம் கெட்டது. கூட்டத்திற்கு வரமுடியவில்லை. வந்த விண்ணப்பங்களை ஆய்ந்து நோக்கியதில் சஞ்சீவிதான் விரிவுரையாளர் பதவிக்கு மிகவும் தகுதி வாய்ந்தவர் என்று எழுதியனுப்பி விட்டதாகப் பின்னர் அறிந்தேன். என் எல்லாத் தகுதிகளையும் நன்கு அறிந்த திரு பிள்ளை அவர்கள் என்னை எவ்வளவு தந்திரமாக விலக்கிவிட்டார் என்பதை இன்றும் வியந்து மகிழ்கின்றேன். நேரில் வந்திருந்தால் குழுவின் முன்னர் என்னை வினாக்களால் விலக்க முடியாது என்பதை நன்குத் தெளிந்தே இவ்விதம் செய்தார் என்பது உறுதிப்படுத்துகின்றது. ஒர் உறுப்பினர் . நீங்கள் ஏன் சென்னைக்கு வர விரும்புகிறீர்கள்? - நான் அது என் விருப்பம். மதிப்புக்குரிய உறுப்பினருக்கு நான் காரணம் சொல்லத் தேவை இல்லை. எனினும் சொல்லுகிறேன். நூலக வசதியும், ஒய்வு நேரமும் அதிகம் இருப்பதால் ஆய்வில் அவாவுள்ள எனக்கு பல்கலைக்கழகப் பதவி வாய்ப்புகளை நல்கும் என நினைத்து இங்கு வரவிரும்புகிறேன். - ஓர் உறுப்பினர் : நீங்கள் காரைக்குடியிலிருந்து கொண்டே உங்கள் ஆய்வைத் தொடங்கலாமே. நெறியல்லாத முறையில் வினாக்கள் அமைகின்றனவே என்று சினந்தேன். சினத்தை அடக்கிக் கொண்டு, "நான் காரைக்குடியிலி ருந்து என் சொந்த செலவில் உங்கள் "அற்புதமான ஆலோசனைகளைக் கேட்கவா சென்னை வந்தேன் என்று மதிப்பிற்குரிய உறுப்பினர் கருதுகின்றாரா? நீங்கள் பயிற்சிக் கல்லூரியில் இருக்கின்றீர்கள். அங்கு நூலக வசதி எப்படியிருக்கும் என்பது உங்கட்குத் தெரியும். சிலசமயம் நீங்கள் என் இடத்திலும் நான் உங்கள் இடத்திலும் இருக்கும் சந்தர்ப்பமும் எழலாம்.