50
அறிஞர் அண்ணா
வால் : அதுதான் தவறு என்கிறேன், நான். மூலத்தை
மாற்றுகின்ற அதிகாரம் உமக்கேதையா?
இராமாயணத்தை சிருஷ்டித்த வால்மீகி நானிருக்க
அதைத் தமிழாக்கம் செய்ய முற்பட்ட நீங்கள்
மூலத்தையே மாற்றி விட்டீரே! அதனால் அல்லவோ
இவ்வளவு தொல்லை உமக்கு!
துரோ : அதுமட்டுமா முனிவரே! இராவணன் கம்பரை
இழித்தும் பழித்தும் கூறுகிறான். அது, வாதி பிரதிவாதி
சண்டை என்று விட்டு விடலாம். ஆனால் முப்பது
முக்கோடி தேவர்களையுமல்லவா அவன் வம்புக்கு
இழுக்கிறான்!
வால் : தேவர்கள் மீது களங்கம் ஏற்படும் வண்ணம்
இராவணன் நீதிமன்றத்தில் வாதிட்டு வெல்வதை
நினைத்தால்...
துரோ : கம்பராலல்லவோ தேவலோகத்துக்கு, இப்படிப்பட்ட
களங்கம் ஏற்பட்டு விட்டது என்று நினைக்கத்
தோன்றுகிறது.
வால் : கம்பரே! நீர் கொடுத்த புகார்கள் விசாரணையின்
போது உங்களுக்கே தீமையாய் வந்து முடியப்
போகிறது. பொறுத்திருந்து பாருங்கள்.
கம் : மாமுனிவரே! கவிச்சக்கரவர்த்தி என்று உலகம்
என்னைப் புகழ்கிறது. அது இந்த இராவணனுக்குத்
தெரியவில்லை. அவனோ என்னை வாதிட்டுக்
கொல்கிறான்.நீரோ, என்னை நையாண்டி செய்து
கொல்கிறீர். ஊம்... நான் வருகிறேன்.
[கம்பர் போகிறார்]
[காட்சி முடிவு]