உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நீதிதேவன் மயக்கம்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நீதிதேவன் மயக்கம்

51



காட்சி - 8



இடம் : அறமன்றம்
இருப்போர் : நீதிதேவன், இராவணன், கம்பர், அக்னி

தேவன்.


இரா : அக்னி தேவனே! புண்ணியத்தை நாடித்தானே
       யாகங்கள் செய்யப்படுகின்றன?

அக்னி : ஆமாம்.

இரா : மனத்தூய்மைதானே மிக முக்கியம் யாக
       காரியத்திலே ஈடுபடுபவர்களுக்கு.

அக்கினி : மனத்தூய்மைதான் முக்கியம்.

இரா : தாங்கள் பல யாகங்களுக்குச் சென்றிருக்கிறீர் – வரம்
       – அருள் –

அக்னி : போயிருக்கிறேன்.

இரா : பல யாகங்களிலே தரப்பட்ட ஆகுதியை உண்டு...

       [அக்னியின் தொந்தியைச் சுட்டிக்காட்டுகிறான்,
        அகனி கோபிக்கிறான்.]

அக்னி : என்னை வேண்டி அழைத்தவர்களுக்குத் தரிசனம்
       தந்து பூஜித்தவர்களுக்கு வரம் அருளி இருக்கிறேன்.
       இலங்கேசா! விண்ணும் மண்ணும் அறியும் என்
       மகிமையை – நீ அறிய மாட்டாய் – ஆணவம்
       உனக்கு...

இரா : மகிமை...! வரம் அருளும் வல்லமை தங்கட்குக்
       கிடைத்தது; தங்களுக்கு இருக்கும் தேவ பதவியால்?

அக்னி : ஆமாம்.

இரா : அந்தத் தேவ பதவி, மும்மலங்களை அடக்கி,
      பஞ்சேந்திரியங்களைக் கட்டுப்படுத்தி, தபோ பலம்
      பெற்று, புண்யத்தைப் பெற்றதால் தங்களுக்குக்
      கிடைத்தது.