நீதிதேவன் மயக்கம்
51
காட்சி - 8
இடம் : அறமன்றம்
இருப்போர் : நீதிதேவன், இராவணன், கம்பர், அக்னி
இரா : அக்னி தேவனே! புண்ணியத்தை நாடித்தானே
யாகங்கள் செய்யப்படுகின்றன?
அக்னி : ஆமாம்.
இரா : மனத்தூய்மைதானே மிக முக்கியம் யாக
காரியத்திலே ஈடுபடுபவர்களுக்கு.
அக்கினி : மனத்தூய்மைதான் முக்கியம்.
இரா : தாங்கள் பல யாகங்களுக்குச் சென்றிருக்கிறீர் – வரம்
– அருள் –
அக்னி : போயிருக்கிறேன்.
இரா : பல யாகங்களிலே தரப்பட்ட ஆகுதியை உண்டு...
[அக்னியின் தொந்தியைச் சுட்டிக்காட்டுகிறான்,
அகனி கோபிக்கிறான்.]
அக்னி : என்னை வேண்டி அழைத்தவர்களுக்குத் தரிசனம்
தந்து பூஜித்தவர்களுக்கு வரம் அருளி இருக்கிறேன்.
இலங்கேசா! விண்ணும் மண்ணும் அறியும் என்
மகிமையை – நீ அறிய மாட்டாய் – ஆணவம்
உனக்கு...
இரா : மகிமை...! வரம் அருளும் வல்லமை தங்கட்குக்
கிடைத்தது; தங்களுக்கு இருக்கும் தேவ பதவியால்?
அக்னி : ஆமாம்.
இரா : அந்தத் தேவ பதவி, மும்மலங்களை அடக்கி,
பஞ்சேந்திரியங்களைக் கட்டுப்படுத்தி, தபோ பலம்
பெற்று, புண்யத்தைப் பெற்றதால் தங்களுக்குக்
கிடைத்தது.