பக்கம்:நீதி போதனைப் பாட புத்தகம்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

________________

நீதி போதனைப் பாட புத்தகம் 1. சீவகாருண்யம்

    இறைவனால் படைக்கப்பட்ட உலகில் உள்ள உயிர் இனங்களுள், மக்கள் இனமே மாண்புடைய இனமாகும். இம் மாண்புடைய மக்கள் இனத்திற்கே பாவ புண்ணியம் என்பதை உணரும் உணர்ச்சியும் பகுத்தறிவு மனப்பான்மையும் உண்டு. இப் பண்பு களின் காரணத்தால் இதனைச் செய்யலாம், இதனைச் செய்யக்கூடாது என்று அறியும் அறிவும் மனித இனம் பெற்றுள்ளது. இப்படிப் பெற்ற மனித இனம் சீவகாருண்ய ஒழுக்கத்தையும் மேற்கொண்டுள்ளது. இப் பண்டைக் கொள்ளாமல் சில மனித இனம் இருந்தாலும்