பக்கம்:நூறாசிரியம்.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

231

படையும் மலைந்திலர் நடையுந் தளர்ந்திலர்!
இடையிடை நெகிழ்தலும் இறுதலும் இல்லார்!
விறலே அவர்தம் கோளே! விறற்கு
மறலே அவர்தாம் தூக்கிய படையே! 30
ஊண்தவிர் நோன்பொடும் உயிர்தீர் முயல்வொடும்
காண்குநர் கண்ணிர் கலுழக் காலமும்
நன்றுந் தீதும் நினையாராகி
ஒன்றும் நெஞ்சொடு சென்றனர் உவந்தே!
தொல்லோர் மரபின் அரசரும் அல்லர்; 35
வல்லோர் வழியின் துறவோர் அல்லர்;
பொருளும் இன்பும் அறத்தொடு நடந்தே
இருள்தீர் வாழ்வும் விழையா ராகி
அற்றைத் தமிழ்த்தாய்க் கிற்றை மகரென
ஒற்றைத் தனிநீள் நினைவொடு சென்றார்! 40

மூவா இளமை முதுமொழிக் கேய்ந்த
தாவாப் பெருந்துயர் தகர்ப்பா ராகி
நெய்யெரி புகுத்திய புகழோர் சிலரே!
மெய்யழி பட்ட மேலோர் சிலரே!
கடுஞ்சிறை தாங்கிய வல்லோர் சிலரே! 45
கொடுங்குறை யுறுப்பொடு நைந்தோர் சிலரே!
யாங்கன் உரைப்பவக் கொடுங்கோல் வினையே!

பூங்கண் மதிமுகப் புன்னகைச் செவ்வாய்
செந்தமிழ் வாழ்கெனச் செப்பிய உரைக்கே
ஈர்ந்தண் உலகமும் இருணிள் விசும்பும் 50
தாமுங் கொடுப்பினும் தகுநிறை வன்றே!
ஒன்றும் ஈயான் ஆகினும் ஒழிக,
கொன்றும் அடங்கிலாச் சாப்பசி கொண்டு
படையற நின்ற நடையி னோரை
விளையா நின்ற இளையோர் தம்மை 55
மலர்முகை சிதைத்துத் தழலிடற் போல
உலர்தி நெஞ்சினன் உயிர்வாங் கினனே!

ஆடல் இளமகள் நல்லுயிர் அயின்ற
கேடுறு நன்னனும் இவன்வினை நாணும்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/257&oldid=1209141" இலிருந்து மீள்விக்கப்பட்டது