பக்கம்:நூறாசிரியம்.pdf/275

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
53 மறல்கொடு நெஞ்சின் மாமகன்


ஆற்றிலம் என்றே அழுங்கினர் சான்றோர்!
நோற்றிலம் என்றே நொந்தனர் முதியோர்!
பெற்றிலம் என்றே ஆடவர் புலம்பினர்!
தாயர் ஆகிலம் என்றனர் தாயர்!
உடப்பிறந் திலமே என்மார் இளையோர்! 5
படற்கிலம் நோக்கெனப் பாவையர் கலங்கினர்:
முந்தினம் அலமென நைந்தனர் உழையோர்!
பிந்தினம் அலமெனக் காவலர் பிதற்றினர்!
முதிராச் சிறுமொழி முனிந்து முத்தமிழ்க்
கதிரெரி எஃகம் அணிமுன் னின்று10
மறல்கொடு நெஞ்சின் மாமகன்
விறல்பெறத் தாங்கி வீழ்ந்த ஞான்றே!

பொழிப்பு :

(இத்தகு வீறு பொருந்திய மறச்செயலை நாம் நம் வாணாளில்) ஆற்றிலமே என்று உள்ளம் வருந்தினர் நன்று எண்ணி நல்லனவே செய்யும் அறிஞர்; (இது போலும் வீரனை நாம் மகனாகப் பெறுதற்கு நாம் நோன்பு) நோற்ற திலமே என்று எண்ணி நோகலுற்றனர், முதியவர்கள்; இவனனைய ஒர் ஆண்மகனை யாம் பெற்றிருக்கவில்லையே என்று) ஆடவர்கள் வாயரற்றிப் புலம்பினர்; (இவனனைய ஒரு மறவனுக்கு) நாம் தாயராக வில்லையே என்று கூறினர்,தாய்மார் பலர் (இவன் போலும் ஒருவனொடும்) நாம் ஒரு வயிற்றில் பிறக்கவில்லையே என்று இளைஞர்கள் உரைத்தனர் : (இவனைப் போலும் ஒருவனின்) கண்களில் நாம் படவும் காதலுறவும் வாய்ப்பிலையே என்று இளநங்கையர் மனம் வருந்தினர்; (இவன் செய்தது போலும் ஒரு மறச் செயலைச் செய்தற்கு நாம்) முந்திக் கொண்டோம் இலமே என்று இவன் நண்பர்கள் உள்ளம் துயருற்றனர்; (ஐயகோ, நம் வேட்டெஃகத்தால் வெடியுண்டு இவன் மாய்ந்திடாதவாறு) நாம் நம் செயலில் சிறிது பிந்திக் கொண்டோம் இலையே என்று (இவனைச் சுட்ட) காவலர் மாறுமொழி கூறி வாய் பிதற்றினர்; அண்மையில் தோன்றி, இலக்க்ண இலக்கியங்களால் முற்றி முதிர்ச்சியுறரத் சிறுமை மொழியாகிய இந்தியை-அதன் திணிப்பைப் பொறுத்துக் கொள்ளாமல், சினங்கொண்டு, முத்தமிழ் நலனுக்காக, தீக்கதிர்களை உமிழ்கின்ற வேட்டெஃகம்(துமுக்கிகள்) சூழ வைத்த காவலர்களின் முன்னர் அஞ்சாமல் எதிரேறி நின்று;