பாவலரேறு பெருஞ்சித்திரனார்
273
இதுவும் முந்தைய பாடல் காலத்து நடந்த வியப்புக்குரிய ஒரு செயலைப் பாராட்டியதாகும்.
செஞ்சிக் கோட்டத்துத் தேவனூர்ச் செம்மல் சிவலிங்கம் என்னும் இளையோன், வடவராட்சியின் இந்தித் திணிப்பைக் கடிந்து கோடம்பாக்கத்துக் கூடல் மறுகில், கன்னெய் யூட்டி எரிபுகுந்து துஞ்சிய செயலை மருட்கையுறப் பாடியதாகும், இது.
“மெய்யுடற்கொண்டு மிளிர்ந்த செயலே, மருட்கையதுவே, மலைமென் னெஞ்சே என்று இறுதியும் தலையும் இணைத்துப் பொருள் கொள்க.
மலைம் - மலையும் என்பது இடைக் குறைந்தது- திகைக்கும்.
இஃது உண்மைகொல் என்று திகைத்தது நெஞ்சம்!
மருட்கை - வியப்பு! அது மிளிர்ந்த அச் செயல்.
குலை - நெஞ்சாங்குலை; குடர்-குடல்- கடைப்போலி.
விதுப்புறுதல் - நடுக்குறுதல்.
தமிழ்தோய் உளத்துத் துணிவு - தமிழ் உணர்வு தானே வந்து பொருந்திய உள்ளத்தில் தோன்றிய துணிவு. என்னை? தமிழில் தான் தோய்தலும், தன்னில் தமிழ்வந்து தோய்தலும் ஆகிய இரண்டு வினைகளுள், முன்னது மகிழ்வுறுதலும், பின்னது துணிவுறுதலும் ஆம் என்க.
வேந்து முன்- அரசின் முன்னம். -
ஒச்சிய விறல்- ஓங்கி நின்ற வெற்றிச் செயல்
வளமான் தோன்றல் - வளப்பமான குடியில் தோன்றியவன். இவ்விடத்து வளப்பம் பெருமையைக் குறித்தது.
இளமை என்கோ - இளமையின் துணிவான செயல் என்பமா?
அலையுலை கொற்றம் மக்களை அலைத்தலும் புன் செயல்களைச் செய்தலும் ஆகிய அரசு கொல்லுதல் உரிமையால் கொற்றம் ஆயிற்று. வெல்லுதல் நிலை வெற்றி ஆனதுபோல. அரசு மக்கள் உயிரைக் கொல்லும் உரிமைபெற்றது. அரசு என்னும் சொல்லும், அரைசு - அழித்தல்நிலைப் பொருளைக் கொண்டதே. இனி, ஆள் என்னும் வேரடியால் ஆட்சியும், மன் (நிலைபேறு, வலிமை) என்னும் வேரடியால் மன்னனும் வருதல் காண்க வேய்தல் (முடியணிதல்) பற்றி வேய்ந்தன் வேந்தன் வேந்து எனவும் வருதல் வரலாற்றுப் படிநிலை வளர்ச்சி நிலையைக் குறிக்கும் சொல்.
உலைவு ஊங்கு உயிர் - துன்புற்று நீங்கும் உயிர்.
முச்சி - தலை உச்சி.
அப்புதல் - வாரிப் பொதிதல், கையால் தேய்த்தல்.