பக்கம்:நூறாசிரியம்.pdf/375

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

349


மொய்குழன் அளைந்து முயங்கியாக் காலே - தலைமகளின் அடர்ந்த கூந்தலை வருடிக் கூடாதவிடத்து.

அச்சங் களைந்து ஆறுதலளிப்பார்தம் மெய்ப்பாடாதல் பற்றிக் கூந்தலை வருடி அணையக் கூறினான்.

மொய்குழல் -அடர்ந்த கூந்தல்; அளைதல் வருடுதல் முயங்குதல் புணர்தல், முயங்காக்கால் என்பது செய்யுள் நோக்கி முயங்கியாக்கால் என நின்றது.

இப்பாடல் குறிஞ்சி என்னும் அகத்திணையும், தோழி தலைவிநிலை கூறித் தலைமகன்பால் வரைவு கடாயது என்னுந் துறையுமாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/375&oldid=1209391" இலிருந்து மீள்விக்கப்பட்டது