பக்கம்:நூறாசிரியம்.pdf/384

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

358

நூறாசிரியம்


முன்றில் கட்டடத்தின் வெளிப்புறத் தாழ்வாரம்.

அடுகவர் - நிலத்தொடு பொருந்திய சுவர்; சுவரோரம்

அடுதல் - பொருந்துதல்.

அளி இரங்கத் தக்க நிலை.

இலை ஆகின்றே இரவே - இராப் பொழுது இல்லை ஆகின்றது

ஓய்வும் உறக்கமுங் கொள்ளுதற்கு இடனாய இராப்பொழுது அவ்வாறின்மையின் இராப்பொழுதாய் இல்லாதாயிற்று.

நாடு நயந்திசின் நல்லோர்க்கும் அஃதே - நாட்டு நலன்விழையும் நன் மக்களுக்கும் அவ்வாறு இராப்பொழுது இல்லாதாயிற்று.

நன்றறி வாரிற் கயவர் திருவுடையர்
நெஞ்சத் தவல மிலர்”

- என்றாங்கு நல்லறிவுடைய பெருமக்கள் பொதுநலங் கருதிக் கவலுதவின் உறக்கங் கொள்ளாராயினார்.

இசின் - அசைநிலை. இப்பாடல் பொதுவியல் என்னும் புறத்திணையும் பொருண்மொழிக் காஞ்சி என்னும் துறையுமாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/384&oldid=1209660" இலிருந்து மீள்விக்கப்பட்டது