பக்கம்:நெஞ்சிற் பூத்தவை.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிரித்த முகம் சிரித்த முகம் வேணுமடி பெண்ணே-அதுதான் சேவை செய்யும் பெண்களுக்கு அழகு தரும் கண்ணே! (சிரித்த) வருத்தங்கள் வாழ்க்கையிலே வந்து வந்து போகும்-அது வந்து புகும் வாழ்விலேதான் t இன்பம் வந்து சேரும்! (சிரித்த) கிள்ளக் கிள்ளத் தேயிலையும் தழையுது பாரு-கடமை செய்யச் செய்ய நன்மை வந்து விளையுது பாரு... மெள்ள மெள்ளத் துன்பம் வரும் இயற்கையின் கூறு-அதைத் தள்ளிவிட்டுக் கடமையிலே இதயத்தைச் சேரு... (சிரித்த) 84 0 கெஞ்சிற் பூத்தவை