பக்கம்:நெஞ்சிற் பூத்தவை.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சீரழிந்து போகாதே புண்ணான என் வாழ்வில் பூத்திருக்கும் பொன் மலரே கண்ணே இம்மண்ணுலகம் காமுகரின் கோட்டமடி பாம்பு தேள் வாழ்வது போல் பாழுலகம் ஆனதடி தேம்புகிற என் வயிற்றில் தெள்ளமுதே ஏன் பிறந்தாய்? கல்லும் கசிந்துருகும் கண்டவர்கள் நெஞ்சுருகும் வல்லி நான் பட்டதெல்லாம் வாய் திறந்து சொன்னாலே. (புண்ணான) சோலை புகும் வண்டாகிச் சூழ்ந்து வரும் ஓர் பாவி ஆலை பிழி கரும்பாக ஆக்கி எனை ஒட்டிவிட்டான் 86 D நெஞ்சிற் பூத்தவை