பக்கம்:நெஞ்சிற் பூத்தவை.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொய்மைகள் மாயும் பாதை தெரியுது பார் பண்பும் அறமும் அன்பும் மலர்ந்திடப் (பாதை) கோதையர் வாழ்வில் எத்தனை தொல்லை கொடுமைகள் இழைப்போர் இனிமேல் இல்லை பேதையராக வாழ்ந்தது போதும் o பெண்களின் துயரம் முடிந்தே தீரும் (பாதை) பேசும் மொழிகள் தேன் போலே இனிக்கும் பெரியவர் போலே வேடம் இருக்கும் பாசமெல்லாம் பிறர் பணத்தினில் இருக்கும் பகட்டாய் நடிப்பவர் வேடத்தைக் கலைக்கும் * . (பாதை) எண்ணும் நினைப்பினில் எத்தனை வஞ்சம் - ஏனோ மனிதனுக்கு இதுபோல் நெஞ்சம் மண்ணில் இனிமேல் பொய்மைகள் மாயும் மாயங்கள் யாவும் வேருடன் சாயும் (பாதை) リa e2-あ衣 のつ。 (கண்ணாடி மாளிகை திரைப்படப் பாடல்-3) 88 E நெஞ்சிற் பூத்தவை