பக்கம்:நெஞ்சிற் பூத்தவை.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

X 'சாதி மறுப்புத் திருமணம் செய்யவாவது இசைவு கொடுங்கள் என அன்னையாரிடம் வேண்டுதல். பெற்றோர் மூலம் கலைச்செல்வி எனும் நலத்த்கை யாரைப் பேராசிரியர் மயிலை சிவமுத்து தலைமையில் சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டார் (1949). திருமணமான ஆண்டே தமது துணைவியாருடன் இந்தி எதிர்ப்புப் போரில் பங்கேற்றார் (1949). கலப்பு மனத்தின் தேவையைப் பற்றிக் கவிதை பல பாடியதோடு இருந்துவிடாமல், தாமும் கல்ப்புத் திருமணம் செய்துகொண்டு, தம் பிள்ளைகள் அனைவருக்கும் அவ்வாறே செய்துவித்துத் தம் கொள்கைக்கு வெற்றி தேடித் தந்ததன் மூலம் அரியவாம் சொல்விய வண்ணம் செயல்’ என்னும் வள்ளுவன் வாக்கைத் தோல்வியுறச் செய்தார். காரைக்குடியில் மீ.சு, உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரி யர் பணியேற்றார் (1949). 'முடியரசன் எனக்குப் பின் கவிஞன் எனப் புரட்சிக் கவிஞர் பாரதிதர்சனால் பாராட்டப் பெற்றார் (1950). குருதி உமிழும் கொடுநோய்க்கு இலக் காகி புதுக்கோட்டைத் தமிழ்ப் புரவலர் அண்ணல் பு. அ. சுப்பிரமணியனார் அருட்கொடையால் உயிர் பிழைத்தார் (1955). மூன்றாவது மகவான ஆண் மகன் பிறத்தல், செய்நன்றி யின் பொருட்டு. தன்னுயிர் காத்த அண்ணல் சுப்பிரமணியனார் நினைவாக அம்மகனுக்குச் "சுப்பிரமணியன்' எனப் பெயரிட்டார் (1955). சுப்பிரமணியன்' என்ற ஆழ்மகன் மறைவு. கவிஞர் பெருந்துயரம் அடைதல் (1959). சென்னை சென்று திரைப்படத்துறையில் ஈடுபட்டார். *கண்ணாடி மாளிகை’ என்ற திரைப்படத்திற்குப் பாடல், உரையாடல் எழுதினார். திரைத்துறையின் சிறுமைகளைக் கண்டு வெறுப்புற்றுத் தம் இயல்புக்கும்.