பக்கம்:நெஞ்சிற் பூத்தவை.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

○ Ο பிற குறிப்புகள் : இளம்பருவத்தில் கவிதை உணர்வை ஊட்டியவர் தாய்மாமன் துரைசாமி அவர்கள். 20ஆம் அகவை வரைக் கடவுளைப் பற்றிய கவிதைகள் இயற்றினார். அவை கிடைத்தில (1939) 21ஆம் அகவை முதல் சமுதாயச் சூழல், மொழி, நாடு, இயற்கை இவற்றையே பாடிவந்தார் (1940). 21ம் அகவையில் இயற்றிய சாதி என்பது நமக்கு ஏனோ?" என்ற கவிதையே முதன் முதலில் அச்சு வாகனம் ஏறியது. இது. பேரறிஞர் அண்ணாவால் 'திராவிட நாடு' இதழில் வெளியிடப்பட்டது (1940). தந்தை பெரியாரின் தன்மான இயக்கத் தொடர்பு (1940). தன் மான இயக்கத் தொடர்பால் 'வித்துவான்' தேர்வில் தோல்வியுறுமாறு செய்யப்பட்டார் (1943). புதுவை மாநிலத்திற்கு அருகில் உள்ள மயிலத்தில் தலைமறைவாக இருந்து படித்து வித்துவான்' பட்டம் பெற்றார் (1947). நவாபு டி. எஸ். இராசமாணிக்கம் நாடகக் குழுவில் பாடல், உரையாடல் எழுதும் பணி, அங்கிருந்த சிறை வாழ்க்கை'யும், மத வழிபாட்டு முறைகளும் பிடிக்காமல் வெளியேறினார். சென்னையில் தமிழாசிரியர் பணி - பல்வேறு இதழ் களில் இலக்கியப் பணி- பொன்னி' இதழில் பாரதி தாசன் பரம்பரைக் கவிஞராக அறிமுகம் - திராவிட இயக்கத் தலைவர்கள், தமிழறிஞர்களுடன் தொடர்பு (1947–49). தான் கொண்ட கொள்கைக்காக விதவைக் கலப்புத் திருமணம் செய்துகொள்ளத் தாயாரிடம் வேண்டுதல். - ஒரே மகன் என்பதால், அவ்வாறு செய்ய இயலாது” என்த் தாயார் மறுத்தல் (1948).