பக்கம்:நெஞ்சிற் பூத்தவை.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழே வா! தமிழே வா செந் தமிழே வா தவித்திடும் என்முன் தனிநடை காட்டித் - தமிழே அமிழ்தோ பாகோ அடைதரு தேனோ அரும்பிய வாய்மொழி கரும்பின் சாறோ - தமிழே காலின் சிலம்பொலி காதினில் இனிக்கக் கைவளை ஒலியும் கலந்தினி திசைக்க நாலடி பாலொடு நடந்து நீ வருவாய் நாலா யிரம்பா நான்தரப் பெறுவாய் - தமிழே அணியும் பொருளும் அளவில் கொண்டாய் ஆயினும் நான்சில அளித்ததும் கண்டாய் வணிகன் வழங்கிய மேகலை ஆடிட வருவாய் வருவாய் வந்தெனைக் கூடிடத் - தமிழே கவியரசர் முடியரசன். E 3