பக்கம்:நெஞ்சிற் பூத்தவை.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எனது வாழ்வில் உற்றவள் ஒவ்வோர் நாளில் உலையிட அரிசி யில்லாச் *சொற்றனை என்பாற் சொல்லத் துவண்டுளஞ் சோர்ந்து செல்வேன்; பற்றுளங் கொண்ட நண்பர் பரிந்துகை கொடுப்பர்: ஆனால் உற்றெனை ஏழை யென்றால் உளத்தினுள் அதனை யேலேன்! (1) உடுத்திடும் உடைக்குக் கூட ஒரோவழித் தவித்த துண்டு துடித்திடும் அற்றை நாளில் துணிபல தந்து துன்பம் துடைத்துநல் லன்பு காட்டித் தோழர்கை கொடுத்து நிற்பர்; நடப்பிது வெனினும் ஏழை என்றெனை நவில மாட்டேன்! (2)

  • சொற்றனை-அசால்தனை

10 - கெஞ்சிற் பூத்தவை