பக்கம்:நெஞ்சிற் பூத்தவை.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொல்லை தரும் அவரையொடு வரகு சாமை கொழுந்துவரை முதலான பொருள்கள் தந்தாள்; பல்வகைய மலர்சூட்டிப் பாலும் நெய்யும் பரிந்தளித்து வாழ்த்துரைத்து நின்றாள் அங்கு. மருதமெனும் மாமனவன் தன்பால் வந்த மலையரசி மகளைத்தா மரைமு கத்தால் பெருமகிழ்வு காட்டிவர வேற்று நின்றான்; பேராம்பல் மலர்சூட்டி வாழ்த்தி நின்றான்; மருமகளின் மனமகிழ நெல்ல ளந்தான்; வாழையொடு கமுகுதரும் குலைகொ டுத்தான். திருவுடையன் வளம்பலவும் உவந்த எரித்துச் செங்கரும்பும் வந்தவட்குத் தந்து நின்றான். பெற்றவரும் மற்றவரும் மகிழ்ந்து தந்த பெருமைமிகு சீர்வரிசை அனைத்துங் கொண்டு நற்றுணைவன் கடற்பேரான் அவனை நோக்கி நயந்தோடி நலம்பாடி விரைந்து சென்றாள்; மற்றவனும் பெருமகிழ்வால் அவளைத் தாவி மார்பிறுக மனமுருக அணைத்துக் கொண்டான்; பெற்றுவரும் வரிசைஎலாம் கொள்க என்றாள்; பெருமகனோ அலைக்கையால் கொள்ளேன் என்றான். Qts—4 கவியரசர் முடியரசன் D 49