பக்கம்:நெஞ்சிற் பூத்தவை.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை )அதிலியது د زو لا زrچ دره ) உணர்ச்சிக்கு நான் ஆட்படும் பொழுதெல்லாம். அவ்வுணர்ச்சியை வெளிப்படுத்தித் தீ ர வே ண் டி ய கட்டாயம் எனக்கு ஏற்படுவதுண்டு. அதன் வெளிப்பாடே இத்தொகுப்பிற் காணப்பெறுங் கவிதைகள். எப்பொழுதோ பாடிய கவிதைகள் இவை; அவற்றை யெல்லாம் என் மகனும், மருமகளும் தேடியெடுத்தனர். உடல் நலங் கேடுறலால் இப்பொழுது புதியன புனைய இயலவில்லை. எனினும், ஒரிரு சமயங்களில் அவ்வுணர்ச்சிக்கு ஆட்படுவதுண்டு. அதன் வெளிப்பாடுகளும் பழைய வெளிப் பாடுகளும் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. இப்பாடல்கள் ஒருபொருள் பற்றியனவல்ல. பல்வேறு பொருள் பற்றியன. ஆதலின், மாலை போலமையாமல் தனித்தனிப் பாடல்களாகவுள்ளன. அதனால், இத் தொகுப்பு நெஞ்சிற் பூத்தவை" என்னும் பெயர் பெறுகிறது. அனைவரும் நுகரலாம், அதன் மணம் பெறலாம். அதனால் இன்பம் உறலாம், நன்றி. காரைக்குடி, அன்புள்ள, 25-10-1990. முடியரசன்