பக்கம்:நெஞ்சிற் பூத்தவை.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எத்தனைப் பாடல்கள்! Fo F. __ முதலில் கேட்பது தாலாட்டு முடிவில் முகாரி எனும்பாட்டு இதனிடை வாழும் மனிதனவன் எத்தனைப் பாடலைப் பாடுகிறான்! - முதலில் காதல் இன்பங் கனிந்திடும் ஒன்று கலக்கம் ஏக்கம் கலந்திடும் ஒன்று மோதும் அவலம் முகிழ்த்திடும் ஒன்று முழுதும் அழுகையில் முடிந்திடும் ஒன்று - - முதலில் குரலும் வீணையுங் குழம்புவ துண்டு கொட்டிய தாளந் தப்புவ துண்டு பொருளும் பாட்டும் முரண்பட லுண்டு பொருளே விளங்காப் பாடலு முண்டு i. - முதலில் விருப்பை வளர்க்கும் பண்களு முண்டு வெகுளி மிகுக்கும் பாடலுமுண்டு வெறுப்பைக் கொடுக்கும் ஓசையு முண்டு வீரமும் மானமும் இடையிடை உண்டு! - முதலில் கவியரசர் முடியரசன் D 57