பக்கம்:நெஞ்சிற் பூத்தவை.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவள்தான் பாடவைத்தாள்! அவள்தான் என்னைப் பாட வைத்தாள் அவனியிற் பெரும்புகழ் சூடவைத்தாள். -அவள்தான் பாலா கினும்சுவைத் தேனாகினும் பாகா கினும்தரும் கேளாமலே நாலா யிரங்கவி நூலாகவே நான்பாடு வேன்.அவை பாராமலே -அவள்தான் கொஞ்சம் வருவாய் எனநான் அழைப்பேன் கொஞ்ச வருவாள் என்னுளம் அணைப்பாள் வஞ்சி என நான் வாய்விட் டழைத்தால் வஞ்சியேன் வஞ்சியேன் என்றுளந் துடிப்பாள் -அவள்தான் கண்ணசை வாலொரு காப்பியம் படிப்பாள் கையசை வாலெழில் ஓவியம் படைப்பாள் பெண்ணியல் யாவையும் என்னிடங் கொடுப்பாள் பெரும்பெருங் - காப்பியம் தரும்படி உரைப்பாள் o - - -ஆவள்தான் கெ-5 கவியரசர் முடியரசன் 0 65