பக்கம்:நெஞ்சிற் பூத்தவை.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இசை மாறிய வீணை! காதலெனும் வீணைதனைக் கையிலெடுத்தேன் கல்யாணி கேட்குமென மீட்டிமுடித்தேன் மோதியது மற்ற இசை காது கொடுத்தேன் முன்னையிசை மாறிடவோ ஆசைபடைத்தேன்! ஒர்நரம்பில் கையமைத்து யாழை இசைத்தேன் வேறிடத்தில் மாறிடயார் கையை அமைத்தார்? சீர்விளங்கும் பாடலொன்று பாடநினைத்தேன் بیيه{g2 சேரவில்லை ஆதலினால் நாடிதுடித்தேன்! மீறிவரும் ஆசையினால் பாடல்படித்தேன் மாறிவருந் தாளத்தினால் வாடிமுடித்தேன் யாரிதற்குக் காரணமென் றாவிதுடித்தேன் ஆறுதலைக் காணவில்லை கண்ணிர்வடித்தேன்! வேதனையில் வீழ்வதற்கோ வீணையெடுத்தேன் வீணாகிப் போவதற்கோ மாலைதொடுத்தேன் சோதனையில் மாள்வதற்கோ ஆசைபடைத்தேன் சோகஇசை பாடுதற்கோ பாடலமைத்தேன்? கவியரசர் முடியரசன் - 71