பக்கம்:நெஞ்சிற் பூத்தவை.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதலர் சொல்லாடல் தலைவன் பஞ்சணையில் மலர்க்கணைகள் பார்வையிலே விழிக்கணைகள் மஞ்சமெனும் போர்க்களத்தில் மாதரசி வீழ்த்திவிட்டாய்! தலைவி : பாய்ந்தாலும் விழிக்கணைகள் பதியவில்லை நின்னுடலில் காய்ந்தாலும் மாறவில்லை காயங்கள் என்னுடலில்! தலைவன் : உள்ளமதிற் காயங்கள் உண்டாக்கி விட்டதம்மா கள்ளவிழிப் பார்வையினால் கலங்கிநிலை கெட்டதம்மா! தலைவி : தஞ்சமென எனையடைந்தாய் தலைவாஎன் மனமகிழ்ந்தேன் நெஞ்சமெனுஞ் சிறையிலிட்டு நேயத்தாற் கட்டிவிட்டேன்

  • 72・ロ கெஞ்சிற் பூத்தவை