பக்கம்:நெஞ்சிற் பூத்தவை.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பருவப் பேச்சு அவன்: அவள்: அவன்: அவள்: அம்புலிப் பருவம் வந்ததும் வருவேன் அதுவரை காத்திரு என்றாளே தண்பனிப் பருவம் தணலாய்க் கொதித்தது தனிமையில் வாடிடச் செய்தாளே! வருகையின் பருவம் தருவது புரிந்தேன் வாடிடும் அந்நிலை ஏன் இனியே? அரிவைஎன் னுள்ளம் நின்வயமாக அருகினில் இருப்பேன் நான் இனிமேல்! ஊசலின் பருவம் ஆகிய தென்மனம் ஒருநிலை யின்றி அலைகிறதே ஆசையின் பெருக்கில் முத்திடும் பருவம் அளித்திட உன்னை அழைக்கிறது! 'காப்பின் பருவம் படிப்பதன் முன்னே கன்னியின் பருவம் நாடுகிறாய் "யாப்பின் பருவம் கடப்பது முறையோ அதற்குள் ஏனோ வாடுகிறாய்?. (1. திருமணம், 2. கட்டுப்பாடு) 74 - கெஞ்சிற் பூத்தன்ை.