உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சுக்கு நீதி 1.pdf/353

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடுத்து 1958 பிப்ரவரி 15, 16 நாட்களில் நடைபெற்ற சேலம் மாவட்ட 3-வது மாநாட்டிற்கு நான் தலைவராகப் பொறுப்பேற்றேன். சேலம் மாவட்டத்தில் ஒரு மூலைப்பகுதியில் வசதிகள் அவ்வளவாக இல்லாத சிறு நகரமான வேலூரில் அந்த மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் நாங்கள் யாருமே எதிர்பார்க்காத அளவு கூட்டம் திரண்டது. சேலம் மாவட்டத்தில் பொதுவாகக் கழகத்திற்கு அப்போது ஆதரவு இருந்தது என்றாலும், வேலூர்-சேலம் மாநாடு, அதற்கு மேலும் கழகத்திற்குப் பெருகியுள்ள புதிய சக்தியைப் புலப்படுத்துவ தாக அமைந்தது.