உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சுக்கு நீதி 1.pdf/396

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்யூனிச உலகத்தை இரு கூறுகளாகப் பிடித்து உடைத்துப் பலமற்றுப் போகுமாறு செய்ததில் நேருவின் ஆர்வமும், கென்னடியின் துணிச்சலும் சரிபங்கு எடுத்துக்கொண்டன. 1971-இல் வங்க நாட்டு மக்களின் விடுதலைக்காக நாம் மேற் கொண்ட மனிதாபிமான மிக்க நடவடிக்கைகளைக் கண்டு பொறாத பாகிஸ்தான், டிசம்பர் 3--ஆம் தேதி வாக்கில் இந்தியா மீது போர்ப் பிரகடனம் செய்து, நேரடி மோதலில் இறங்கியது.