பக்கம்:நெஞ்சு பொறுக்கவில்லையே.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சு பொறுக்கவில்லையே ஆறறி வுள்ளவர் மாந்தரடா - விலங் காகிட ஏன்மனம் சாய்ந்த தடா? சோறது பெற்றிடத் தாழ்ந்தனரே - மனத் துய்மையை விற்றிட வீழ்ந்தனரே மாறிய போக்கினைக் கற்றனரே - உயர் மான வுணர்ச்சியைச் செற்றனரே கூறிய நீதிகள் எவ்வளவோ - அவை கூறுவர் மேடையில் அவ்வளவே o ஒன்றையே தேடுகிறார் - அதைச் - 書 சட்டமென் றனக்கிட நாடுகிறார் என்ன தான் செய்யினும் நெஞ்சினிலே - முனம் ஏற்றுகி றார வர் வஞ்சனையே பன்னிய நல்லறம் நீக்கினரே - மனப் பண்புகள் யாவையும் போக்கினரே இந்நிலை கண்டுளம் வாடுகிறேன் அதை எற்றித் துவைத்திடப் பாடுகிறேன் எங்கெது காணினும் வஞ்சமடா - அதை எப்படித் தாங்கிடும் நெஞ்சமடா இங்கெவர் போக்கிலும் குற்றமடா - இதை எண்ணிடும் போதெலாம் செற்றமடா எங்கனுங் கீழ்மையைச் சாடிடுவேன் - மனம் ஏற்றம் பெறக்கவி பாடிடுவேன் பொங்குக பண்புகள் பொங்குகவே - நலம் பூத்துப் பொலிந்துவி ளங்குகவே 19