பக்கம்:நெஞ்சு பொறுக்கவில்லையே.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சு பொறுக்கவில்லையே நாயினுங் கீழென வாழ்வதுவோ-திரு நாட்டின் பெரும்புகழ் சாய்வதுவோ? ஈயென எங்கனுந் தோய்வதுவோ? - மனம் ஈனத் தனத்தினிற் பாய்வதுவோ? போயெதிர் காலத்தை நோக்குகிறேன் - மனம் புண்பட்டுப் போவதால் தாக்குகிறேன் வாயினை எப்படி முடிடுவேன்? - உயர் வாய்மையைக் காத்திடப் பாடிடுவேன் நாளைய நாடுன தாட்சியிலே - என நாடி நடந்திடு மாட்சியிலே காளையே தீமையைக் காய்ந்துவிடு - பல கற்றவர் நூல்களை ஆய்ந்துபடி தோளினைப் பாரினில் துாக்கிநட - வரும் தோழனே கீழ்மையைத் தாக்கிவிடப் பாளைச் சிரிப்பினைக் காட்டிடுவாய் - அதிற் பண்புகள் யாவையும் ஊட்டிடுவாய் தீய குணங்களைத் துரக்கிஎறி - அது தெள்ளிய நாட்டினைக் காக்கும் நெறி துய மனத்தினைப் போற்றிநட - பொதுச் சொத்தினை க் கண்ணென க் காத்து நட சே யுன தன்னை யின் நா டுயர - மனச் செம்மையைக் காத்திடப் பாடுபடு தாயக மேன் மையை ஆக்கிவிடு - வளர் தம்பிஎன் வேதனை நீக்கிவிடு 20