பக்கம்:நெஞ்சு பொறுக்கவில்லையே.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சு பொறுக்கவில்லையே முடிவளர்ப்பர் புதர்முளைத்த செடிகள் போலே; முகம்மறைப்பர் மூக்குக்கண் ணாடி யாலே; அடிமறைக்கும் தொளதொளத்த காலின் சட்டை அணிந்திருப்பர் பூப்பொறித்த மேலின் சட்டை, படிமறப்பர், நடைமறப்பர், தெருவிற் செல்லும் பாவையரை வழிமறைப்பர், கூத்த டிப்பர்; குடிகெடுக்கும் காளைகளைக் காணும் போது குமுறிமிகத் துடிதுடிக்கும் எனது நெஞ்சம் எதிர்காலம் இவர்கையில் என்று நம்பி இருக்கின்றார், நிகழ்காலப் பெரியோர்; ஆனால் உதிர்காலம் போலன்றோ இளைஞர் வாழ்க்கை உருள்கிறது; தளிர்காலம் வருமா என்னும் புதிர்கோலம் இடுவதனால் எனது நெஞ்சம், பொழிபனியின் குளிர்கால நடுக்கம் போல விதிர் விதிர்க்கும்; துடிதுடிக்கும் அவர்தம் நெஞ்சில் விடிகாலம் அரும்பிவரும் காலம் என்றோ? புதிய அலை எனும்வலையை வீசி விட்டால் பொருள் பெருகும் புகழ்வளரும் என்று நம்பி மதிதவறி எழுத்தாளர் வீழ்ந்து விட்டார்; மனமயக்கம் தருகின்ற காமச் சாற்றைப் புதுமுறையிற் பிழிந்தெடுத்து வார்த்து வைத்துப் புத்தகங்கள் பத்திரிகை எழுதி விட்டார்; கதையிதுவா? கலையிதுவா? இளைய நெஞ்சம் கருகிவிடும் வழியன்றோ எனத்து டித்தேன் படி பூமி, நடை - ஒழுக்கம். 23