பக்கம்:நெஞ்சு பொறுக்கவில்லையே.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சுபொறுக்கவில்லையே "சாதிகளே இல்லையடி பாப்பா நம்முள் தாழ்வுயர்வு சொல்லுதலே பாவம்' என்றே ஒதிய ஒர் பாரதியும் செத்துவிட்டான் உட்புகுந்த சாதிகளோ சாக வில்லை; வேதியர்கள் தாம்வாழ வகுத்து வைத்த வேதநெறி திராவிடத்தில் துாள் துரள்’ என்று மோதின ன் நம் பாவேந்தன் ; வீதி தோறும் முளைப்பதலால் துளாக வில்லை யிங்கே! ஒருருவம் இல்லாத கடவுள் ஒவ்வாத பகைமூட்டும் மதத்தின் பேரால், சீரழிவு பெற்றுவரும் சமுதா யத்தைச் செப்பனிட வந்தஒரு பெரியார் இங்கே ஆறறிவுப் போர்தொடுத்து மாண்ட பின்பும் அர்த்தமிலா எந்தமதம் மாண்ட திங்கே? ஆரவர்போற் போராட வல்லார்? இன்னும் அழிவகல வில்லையெனத் துடிது டித்தேன். "சாதிஎனச் சமயமென முளைத்து வந்த சழக்குகளை விட்டுவிட்டேன்’ என்று கூறி மேதினியில் மறுமலர்ச்சி காண வந்த மேன்மைமிகும் இராமலிங்கர் அருட்பா நூலை ஒதிவரும் தொண்டருக்குப் பஞ்ச மில்லை; சழக்குகளை ஒழிக்கத்தான் நெஞ்ச மில்லை; யாதினி நாம் செய்வதென எண் னி எண்ணி அகமெல்லாம் துடிதுடிக்கும் வெம்பும் சோரும் 22