பக்கம்:நெஞ்சு பொறுக்கவில்லையே.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சு பொறுக்கவில்லையே கற்றிட அரசு நல்கும் காசெலாம் பாழே யாக்கிப் பெற்றவர் பட்ட பாட்டைப் பேனிய கனவை யெல்லாம் முற்றவும் வீணே யாக்கி முழுமதி தேய்த்து விட்டாற் பிற்றைநாள் வாழ்க்கை தன்னை ப் பேரிருள் கவ்வு மன்றே? படித்திட வந்த நீவிர் பண்பினை மறந்து விட்டுக் குடித்திடக் கற்றுக் கொண்டீர் உரை க்கவுங் கூசு கின்றேன் மடத்தினில் வீழ்ந்து நாளும் மயங்கியே திரியும் நும் மைத் தடுத்திட வில்லை யென்றால் தறிகெட்டுப் போகும் நாடு. திரிபறக் கற்றுப் பின்னர்த் தெளிந்த நல் லறிவு பெற்று மருவிய பணிக ளேற்றும் மற்றவர் வணிகஞ் செய்தும் அரசியல் சார்ந்தும் நாளை ஆள்பவர் பழுது பட்டீர் திரிதருந் தேரின் அச்சு தெறித்திடின் நிலையென் னாகும்? 27