பக்கம்:நெஞ்சு பொறுக்கவில்லையே.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சு பொறுக்கவில்லையே அடித்தளம் சிதையு மாகின் ஆங்கொரு மண்ட பந்தான் படைத்திட யாரால் ஒல்லும்? பண்பினை மறந்தே ஆடும் தடித்தனம் தவிர்ப்பீர் இன்றே துங்கட ன் தலைமேற் கொள் விர் நடைப்பிண மல்ல நீவீர் நாட்டினைக் காக்கும் வீரர். அ படிப்பதற் கேற்ற நல்ல பருவத்தைப் பாழிற் போக விடுத்திடின் அதுதான் நாளை மீளுமோ? விளையும் நேரம் கடித்திடும் விட்டில் வீழ்ந்தால் களஞ்சியம் நிரம்பு மோ என் றடிக்கடி எண் னு வீரேல் அடையலாம் நலங்கள் யாவும் அடிக்கடி ஆசான் சொன்னால் அடிமையா நாங்கள் என்பீர் படித்திடப் பெற்றோர் கூறின் அதற்கும் நீர் படிவ தில்லை தடுத் திடும் சான்றோர் சொல்லை எள்ளியே தள் ளு கின் றீர் அடுக்குமா இந்தப் போக்கு வாழ்வையே அழிக்கு மன்றோ? 28