பக்கம்:நெஞ்சு பொறுக்கவில்லையே.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சு பொறுக்கவில்லையே "எல்லாரும் இந்நாட்டு மன்னர் என்பார் எமைமட்டும் அடிமைகளின் சின்னம் என்பார்; கல்லாரும் மயங்குமிசைத் தட்டுப் பாட்டை க் காதுகளில் பாயவிடும் நேரம் பார்த்துச் சொல்லாருந் தமிழ்மொழியாம் கணக்காம் ஏதோ துணைமொழியாம் அறிவியலாம் இப்படித்தான் பொல் லாத பாடமெலாம் பாய்ச்சு கின்றார் பொறுமையுடன் கேட்பதற்குச் சிலையா நாங்கள்?’’ ‘'வேளை தொறும் கல்வி தரும் ஆசான் எங்கள் விளையாட்டுச் சிறுபொம்மை; வகுப்போ நாங்கள் ஆளயரும் பொழுதத்துச் சடையைக் கட்டி ஆடைகளில் முடிச்சிட்டுக் களிக்கும் மேடை , காளையரும் மங்கையரும் அகத்து றைக்குள் களவியலை ஒத்திகைபார்த் திருக்குங் கூடம்; தோளுயரும் பொழுதத்தில் ஆசா னோடு தொடுக்கின்ற போர்நடத்தும் களமும் ஆகும்.' மானவர்கள் இவ்வண்ணம் உரைப்ப ரானால் மதிநலந்தான் உருப்படுமா? நாட்டின் மேன்மை கான வரும் நாள் வருமா? இந்த மண்ணில் கல்விவளி, ந் தான் பெறுமா? படிப்ப தற்குப் பூனழகுப் பொருள் விற்றுக் காடு விற்றுப் பொருளனுப்பி எதிர் கால ஒளியை நம்பிக் கான எதிர் பார்த் திருக்கும் பெற்றோர் நெஞ்சம் களிப்புறுமா? விடிவெள்ளி அங்கா தோன்றும்? 30