பக்கம்:நெஞ்சு பொறுக்கவில்லையே.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சு பொறுக்கவில்லையே நூலகமும் மாணவரும் O புகுதற்குத் தகுதியிலா இடமே என்று புந்திதரும் நூலகத்தை ஒதுக்கி விட்டீர்; நகுதற்கும் ஆடலுக்கும் மனத்தைத் தந்தோர் நாடிவரின் பலனில்லை; அறிவு வேலைத் தகதகக்கக் கூர்ப்படுத்துஞ் சாணைக் கற்கள் சாருமிடம்; அறியாமைப் பகையை மாய்க்கும் தகுதிபெற, நுழைபுலமும் கூர்மை யாகத் தகுதியுடன் பதமாகச் செய்யுஞ் சாலை. ஒருமையுடன் நூலகத்துள் நுழைதல் வேண்டும்; உயர்ந்தகலை நூல்பலவும் படித்தல் வேண்டும்; பெருமைதரும் நூலதனைப் படிக்கும் போது பேச்சின்றிப் புறவழியில் நாட்ட மின்றிப் பொறுமையொடு கண்ணுான்றிக், கருத்தும் ஊன்றிப் புத்தகத்து நல்லமுதைப் பருகல் வேண்டும்; பெறுபொழுதை இவ்வண்ணம் பயன்ப டுத்திற் பெருமைஎலாம் வழிவினவி வந்து சேரும். 31