பக்கம்:நெஞ்சு பொறுக்கவில்லையே.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சு பொறுக்கவில்லையே ஒப்பனையும் மாணவரும் O பாடலெது? உரைநடைதான் எதுவென் றிங்குப் பகுத்துணர இனமுணர இயலா வண்ணம் மேடையிலே முழங்குவதைக் கேட்டுக் கேட்டு மெல்லிய என் உள்ள மெலாம் நைந்து நைந்து வாடுகிறேன்; அதுபோலக் கல்வி கற்க வருபவர்தம் ஒப்பனையால் அவர்த மக்குள் ஆடவர் யார்? மகளிர் யார்? தோற்றத் தாலே அடையாளந் தெரியாமல் மயங்கு கின்றேன். பிடர் வரையில் தொங்குகிற முடிகள் வாரிப் பேணாமல் சிதறுண்டு முகம்ம றைக்கும்; தொடர்ந்துவரும் தமிழ்வீரந் தாழ்ந்து விட்ட துயரத்தைத் தொங்குகிற மீசை காட்டும்; அடர் செடிகள் விலங்கினங்கள் பொறித்த சட்டை

  • அடவியில்வாழ் மாந்தரையே நினைவிற் கூட்டும்; இடையணிந்த தொளதொளத்த காலின் சட்டை

இருக்கின்ற துரசியெல்லாம் தெருவில் கூட்டும். ACH அடவி க காடு 33