பக்கம்:நெஞ்சு பொறுக்கவில்லையே.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சு பொறுக்கவில்லையே முகமதிய ரானவர்தாம் கைலி என்று மூட்டிவைத்த ஆடைதனை உடுத்திக் கொள்வர்; முகமதிய ரான வரும் பயிலும் போது முற்போக்கென் றதனைத்தான் உடுத்து கின்றார்; பகலிரவில் எவ்விடத்தும் கைலி யைத்தான் பகட்டாக மாணவரும் உடுத்து கின்றார்; நகைமொழிக்குக் கூறவில்லை; அம்ம தத்து நாடாக்க அவரெல்லாம் நினைந்தார் போலும். நலங்கோலம் செய்கின்ற பருவம் ஈது நாகரிக உடையணியும் பருவம்; ஆனால் அலங்கோலஞ் செய்தன்றோ உலவு கின்றார்; அழகுக்குப் பொருளொன்றும் விளங்க வில்லை; நலங்காத புறக்கோலம் செய்தல் ஒன்றோ நன்மைதரும்? அகக்கோலம் வேண்டு மன்றோ; நலங்காணும் நாட்டத்திற் சொல்லு கின்றேன் நாகரிக வளங்காண முயல்க நன்றே.

  • முகம் மதியரி ஆனவரும் பதி போ முகமுடைய மகளிரும் நலங்காத கசங்காத

W.