பக்கம்:நெஞ்சு பொறுக்கவில்லையே.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சு பொறுக்கவில்லையே அரசியலும் மாணவரும் O படிக்கின்ற பருவத்தைக் கல்விக் கென்றே பயன்படுத்திக் கொளல்வேண்டும்; அதைவி டுத்துத் துடிக்கின்ற உணர்வுக்குத் தீனி யிட்டால் தொலையாத துயரந்தான் மிஞ்சி நிற்கும்; வெடிக்கிடங்கில் எவரேனும் நெருப்பை வைத்து விளையாட நினைவாரோ? வேட்கை தீரக் குடிக்கின்ற புனலுாற்றை அடைத்து விட்டால் கொடும்வறட்சி தோன்றுமலால் வளமா தோன்றும்? அரசியலைக் கற்றுணரும் ஆர்வம் வேண்டும்; அயல்நாட்டு நடைமுறையுந் தெரிதல் வேண்டும்; புரையறுநூல் அறிவுவளம் பெற்ற பின்னர்ப் புகுவார்க்கே அரசியலில் வெற்றி வாய்க்கும்; அரைகுறையாக் கல்வியினை விட்டு, மேடை அரசியலிற் புகுவதனாற் பயனே இல்லை; பொருசமரில் படைக்கலங்கள் இல்லா மாந்தன் புகுவானேல் புறமுதுகே காட்ட நேரும். 35