பக்கம்:நெஞ்சு பொறுக்கவில்லையே.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சு பொறுக்கவில்லையே வாழ்ந்திட வழிகள் காட்டும் வானுயர் பணியில் உள் ளீர் வீழ்ந்திடக் குழிகள் காட்ட விழைவதோ? ஆணி வேரைப் போழ்ந்திடல் முறையோ? இந்தப் புன்மையில் இறங்கி நீவிர் ஆழ்ந்திட நினைந்த தேனோ? ஐயவோ கொடுமை யன்றோ. உருவமும் உடையும் உங்கள் உயர்வினைக் காட்ட வில்லை; பருவமும் பழகும் பாங்கும் படிப்பினைக் காட்ட வில்லை; ஒருவனும் குறைகள் சொல்லா தொழுகுக இனிமே லேனும்; கருவறை பழுது பட்டாற் கையினிற் குழந்தை ஏது? பாடங்கள் புகட்டும் பாங்கைப் பையவே மறந்து போனின் கூட்ங்கள் திறவா வண்ணங் கூடி நீர் தூண்டி விட்டால் ஏடுங்கள் கையிற் கொண்டும் என்ன தான் பயனோ சொல்விச் ஒடங்கள் ஒட்டை யானால் ஒல்லுமோ கரையைக் காண? 44