பக்கம்:நெஞ்சு பொறுக்கவில்லையே.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சு பொறுக்கவில்லையே புலவர் குறிக்கோள் O புலவரெனும் மொழிசெவியிற் புகுந்திடுமேல் உள்ள மெலாம் பூரிப் பேன்நான்; அலகில்புகழ் மன்னரையும் அவரெதிரில் இடித்துரைக்கும் அஞ்சா நெஞ்சர் குலவிவரும் வறுமையிலும் கூடிவரும் பெருமிதத்திற் குன்றாச் செல்வர் உலகுறினும் பழிபுரியார் உயிர்செலினும் நிலைகுலையார் உயர்ந்தே நிற்பார் உலகினர்தாம் நெறிபிறழின் உளந்தரியா தறிவுறுத்தும் உரிமை யுள்ளார் பலர்விழையஞ் செயலெனினும் பழியென்றால் தடுத்துரைக்கும் பண்பு கொண்டார் மலர் வருந்தா ததன் நறவை மகிழ்ந்துறிஞ்சி இசைபாடும் வண்டு போல்வார் நிலவுலகில் தம்வாழ்வை நினைந்தறியார் பிறர் நலமே நெஞ்சிற் கொள் வார். 45