பக்கம்:நெஞ்சு பொறுக்கவில்லையே.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சு பொறுக்கவில்லையே அத்தகைய பெயர்தாங்கும் ஆசான்மார் நிலைகாணின் அந்தோ நெஞ்சம் பித்தாகி மயலாகிப் பேதுற்றுச் சுழல்கின்றேன் பேசும் நாவிற் கொத்தாகி வரும்மொழியின் கூட்டத்தை நும்முன்னர் க் கொட்டு கின்றேன் எத்தாலும் பழிகளுமக் கேற்படுமேல் எனையுமவை சாரு மன்றோ? பேசுங்கால் எழுதுங்காற் பிழைமலியக் காண்கின்றேன்; பிறழ்ந்து நாவை வீசுங்கால் வரையுங்கால் வீணாவர் மற்றவரும்; விளைவைக் கண்டு கூகங்கள்; மாசுங்கள் மாதமிழ்க்குச் சேர்க்காதீர்; கோல வாழ்விற் காசுங்கள் குறிக்கோளா? கசடறுதல் குறிக்கோளா? எதற்குக் கற்றீர்? நாட்டவரைத் திருத்துதற்கு நல்லுரிமை பெற்றவர்நீர் நலிதல் நன்றோ? வேட்டெழுந்து மற்றவரா விளக்கியுமைத் திருத்துவது? வெட்கம் வெட்கம் ! நாட்டமுடன் முயன்றுரிய நலங்களெலாம் தகுதியெலாம் நயந்து கொள்க கோட்டமது தவிர்த்திடுக கொண்டிருக்கும் பொறுப்புணர்ந்து கொண்டாற் போதும்.


எத்தாலும்-எதனாலேனும். கோட்டம்-வளைவு, குறைபாடு. 46