பக்கம்:நெஞ்சு பொறுக்கவில்லையே.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சு பொறுக்கவில்லையே உசடித்தவர் பட்டம் பெற்றோர் பதவியில் உச்சம் பெற்றோர் கெடுத்தனர் அறத்தை என்றால் கீழ்களை விட்டு வைத்தல் மடத்தன மன்றோ? நாட்டில் மக்களேன்? சட்டந் தான் ஏன்? தடுத்திதை நிறுத்தா விட்டால் தாங்கிடுஞ் செங்கோல் ஏனோ? கைப்பணம் ஒன்றுக் காகக் கடமையை விற்கும் மாக்கள் பொய்ப்பினம் போல்வர்; நாட்டில் நோய்செயும் புழுக்க ளாவர்; பைப்பணம் காட்டி விட்டால் நாட்டையும் ட கைக்கு விற்பர்; செய்ப்புலக் களை யால் நன்மை செழித்திட வழியே இல்லை. ஆடாது சமன் செய் கோல்போல் அவரவர் செயலுக் கேற்பக் கோடாது நடுவில் நின்று கூறலே தீர்ப்பின் பாங்கென் றேடாளுஞ் சான்றோ ரெல்லாம் இயம்புவ துணர்ந்த நல்லோர் ஊடாக இருத்தல் கண்டேன் உள் ளத்தில் அமைதி கொண்டேன் 49