பக்கம்:நெஞ்சு பொறுக்கவில்லையே.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சு பொறுக்கவில் லையே வெடுக்கெனப் பேசு வோரும் விறைப்புடன் கனன்று தேளின் கொடுக்கென க் கொட்டு வோரும் கொடுப்பதைச் சுருட்டு வோரும் படுக்கையிற் கிடப்பார் தம்மைப் பாவிகள் படுத்தும் பாடு நடுக்கமே கொள்ளச் செய்யும் நலிந்தவர் யாது செய்வர்? விலையுயர் மருந்த னைத்தும் வேறிடம் பறந்து போகும் இலைகறி காய்க ளெல்லாம் எங்கெங்கோ சமைய லாகும் அலைவுறும் பிணியோர் இங்கே அலையுறுந் துரும்பாய் நிற்பர் நிலையிது கானுங் காலை நெஞ்சினிற் கனலே மூளும். மருத்துவர் வீட்டிற் கேகி வைப்பதை வைத்து விட்டால் திருத்தமாக் கவனம் வைப்பர் பிணிகளும் தீர வைப்பர் நரித்தனத் தாதி மார்கள் நாடகம் ஆடும் முன்பே அரித்திடும் அவர்தம் கையில் அதை அதை வைத்தல் வேண்டும் 53