பக்கம்:நெஞ்சு பொறுக்கவில்லையே.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சு பொறுக்கவில்லையே நியாய விலைக்கடை O நிறுக்கின்ற பொருள்களிலும் அளக்கின்ற பொருள்களிலும் நேர்மை யுண்டா? வெறுக்கின்ற படியன்றோ விளையாடல் புரிகின்றார்; விலைகொ டுப்போர் கறுத்தெழுந்தால் நியாயவிலைக் கடையென்பார் நியாயத்தைக் கடையில் விற்பார்; பொறுத்திருந்து பார்த்திருப்போர் பொங்கியெழும் நாளொன்று புகுந்தே தீரும். வாங்காதார் பெயர்களெலாம் வாங்கியதாப் பதிந்திருக்கும்; வந்து விட்டால் தீங்காளர் பொருள் நேற்றே தீர்ந்ததென்பார்; அதுவேறு தெருவிற் போகும்; போங்காலம் வாராதோ? பொதுமக்கள் ஏங்குகிறார்; புல்ல ருக்கே ஆங்காலம் ஆயிற்றா? அழிகாலம் மேவிற்றா? ஆரே கண்டார்! 55