பக்கம்:நெஞ்சு பொறுக்கவில்லையே.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- வலிமை நெஞ்சு பொறுக்கவில்லையே தலந்தரு சொற்போர் அங்கே நடத்துவர் என்றி ருந்தோம் 'வலம்படு மற்போர் ஒன்றே தவத்திட வகுத்து நின்றார்; சிலம்பமும் ஆடு கின்றார் செருப்புகள் வீசு கின்றார்; துலங்குமா சட்ட மன்றம்? துவென இகழ்தற் காகும். தேர்தலில் அரசின் சார்பிற் செலவிடும் தொகைக ளெல்லாம் யார்பணம்? மக்கள் கட்டும் வரிப்பண மன்றோ? யாதும் நேர்மையை நினையா ராகி நீதியை மதியா ராகித் தேர்விளையாடு கின்றார் தெருவிடைச் சிறுவர் போலே. "நாட்டினை உயர்வு செய்யும் நல்லதோர் நினைவை நீக்கி வீட்டினை மேம்ப டுத்தும் வீணர்க்கா வாக்க ளித்தோம்? கேட்டினை வளர்ப்ப தற்கா வாக்கினைக் கெடுத்து விட்டோம்? நாட்டினர் இவ்வா றெண்ணி நலிவதைக் கானு கின்றோம் 63