பக்கம்:நெஞ்சு பொறுக்கவில்லையே.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* நெஞ்சு பொறுக்கவில்லையே ஏச்சு மேடை அரங்கேறிப் பேசுகின்ற அரசியலின் சார்பாளர் அறிவின் பண்பின் திறங்காணும் படிபேசிச் செவிகுளிர மனங்குளிரச் செய்வ துண்டு; தரங்கூரும் அந்நிலையர் தமிழறிந்தோன் சிலரானார் தமிழ கத்தில் புறம்போகும் பேச்சாளர் புல்லறிவர் பலரானார் புழுக்கள் போலே. அரசியலின் நுணுக்கங்கள், ஆக்கவழித் திட்டங்கள், அண்டை நாட்டில் பொருளியலில் வளர்முறைகள், புதுமுறையில் தொழில்வளர்ச்சி, பொதுமை நோக்கம் விரவிவரும் உளப்பாங்கு வேத்தியலின் வரலாறு விளக்கிக் காட்ட உரியவரா பேசுகின்றார்? ஓரளவும் விளங்காதார் உளறு கின்றார். 65